கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் மரணம் தான் என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார செயலர் கூறுகிறார்.
கொரோனா:
கொரோனா நோய் தொற்று நம் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அது நம் மத்தியில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மரணம் நிச்சயம் என்பது போன்ற சிந்தனைகளை உருவாக்கி உள்ளது.
இது தவறானது என்று கொரோனா நோய் தொற்று என்றும் அதனில் இருந்து மீண்டு வரலாம் என்று மக்கள் நம்பவேண்டும் என்று சுகாதார துறை செயலர் கூறி உள்ளார்.
“56% குணம் அடைந்து உள்ளனர்” :
சென்னை தண்டையார்ப்பேட்டையில் நடக்கும் மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
” கொரோனா பரவலால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அந்த தொற்றில் இருந்து தப்பிக்கலாம். நாம் நம்மை தற்காத்து கொள்ள தேவையானவற்றை பின்பற்ற வேண்டும். நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்தால் தான் நோய் பரவும். அதனால் உடலை நன்கு பேணி பாதுகாக்க வேண்டும்.
இதுவரை 56% மக்கள் நோய் தொற்று உறுதியுறுத்தி செய்யப்பட்டு மீண்டு வந்து உள்ளனர். மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது. 11 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.” அவர் கூறி உள்ளார்.