இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரணி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, ஒளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கடந்த 2000 ஆண்டில் வெளியான பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு இவர் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி சினிமாவில் பல பாடல்கள் படித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த பவதாரணி(47) கடந்த ஐந்து மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இலங்கையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வர உள்ளது. இவரது இறப்பிற்கு இயக்குனர் பாரதிராஜா, முதல்வர் மு க ஸ்டாலின், ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எஸ் முருகன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது இறப்பு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த Online Course-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!!