பிசிசிஐ அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாடுவேன் – நடராஜன் பேட்டி!!

0

இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக உருவாகி கொண்டிருக்கும் நடராஜன் BCCI அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

நடராஜன் விருப்பம்

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டி 20 மற்றும் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகமானார் தமிழக வீரர் நடராஜன். அந்த போட்டியில் நடராஜனின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது இந்தியா – இங்கிலாந்து இடையே நடக்கப்போகும் கிரிக்கெட் போட்டிகளில் நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

சிவப்பு வண்ண உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டி அளித்த நடராஜன், “தமிழக அணியின் சார்பில் விஜய் ஹசாரே கோப்பைக்காக விளையாட ஆயத்தமாக இருக்கிறேன். இது போல சையத் முஸ்தாக் அலி கோப்பைக்காக தமிழக அணியில் விளையாட விருப்பம் தெரிவித்தேன். ஆனால் பிசிசிஐ எனக்கு ஓய்வு அளித்தது. தற்போது பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணிக்காக விளையாடுவேன்” என கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அவர் கூறியபோது, “தமிழ்நாடு அணிக்காக இதுவரை விளையாடின போதிலும் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்காக விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆண்டிற்கான சையத் முஸ்தாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அணி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடியது. தமிழக அணிக்கு இது முக்கியமான வெற்றியாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here