ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேட்ட வித்தியாசமான வரதட்சணை – என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க..!

0

நெல்லையில் சப் கலெக்டர் ஆக பணிபுரியும் சிவகுருபிரபாகரன் தனது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் கேட்ட வரதட்சணை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது தமிழக மக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.

டாக்டர் பெண் வேணும்..!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருபிரபாகரன் (30) நெல்லை மாவட்டத்தில் சப் கலெக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அதுமட்டுமில்லாமல் அப்துல்கலாம் பெயரில் டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சி குழு என ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களிடம் மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்து வருகிறார். இதற்கு உதவ தனக்கு டாக்டர் பெண் தான் மனைவியாக வர வேண்டும் என விரும்பினார். அவரின் ஆசைப்படியே சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பாரதியை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்தனர்.

பெண் வீட்டாரிடம் 100 சவரன் நகை, பணம் மற்றும் கார் போன்ற எந்த விதமான வரதட்சணையும் கேக்காமல் தன்னுடைய மனைவி கிராமத்திற்கு வரும் போது அங்குள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அவரின் இந்த மனிதத்தை பார்த்த பெண் வீட்டாரும் மகிழ்ச்சியாக தங்கள் டாக்டர் மகளை கரம் பிடித்துக் கொடுத்தனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here