பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கிய சர்ச்சை.. அதிபர் ராஜினாமா!!

0

தற்போதைய காலகட்டத்தில் பாலியல் கொடுமை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதாவது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமையால் அவதிப்படும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஹங்கேரி நாட்டில் காப்பகத்தில் வசித்த குழந்தைகளுக்கு ஓர் நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபருக்கு, அந்நாட்டு அதிபர் கட்டலின் நோவாக் பொது மன்னிப்பு வழங்கினார். இது அந்நாட்டு மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பலரும் அதிபருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கட்டலின் நோவாக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here