இந்தியாவில் முதியவர்கள் கொலை அதிகம் நடைபெறக் கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 152 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் ஆகும். மேலும் தமிழகத்தில் முதியவர்கள் மீதான கொலை முயற்சிகளும் அதிகமாகவே உள்ளன. மொத்தம் 3,162 வழக்குகள் மூத்தக் குடிமக்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ளன.
ஆனால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தமிழகம் தான் அதிக முதியவர்கள் வசிக்கும் மாநிலமாகவும் உள்ளது. முதியவர்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்திலும், மஹாராஷ்டிரா (135 கொலைகள்), மூன்றாவதாக உத்திரப் பிரதேசமும் (127 கொலைகள்) உள்ளது.