சுவையான சூப்பரான வடகறி – செஞ்சு அசத்துங்க!!

0
Vada curry
Vada curry

தென்னிந்தியாவில் மிக பிரபலமான உணவு என்றால் அது வடகறி தான். இது இட்லி மற்றும் தோசைக்கு அருமையாக இருக்கும். கடைகளில் இருக்கும் இந்த வடகறியை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

vadakari
vadakari
  • கடலைப்பருப்பு 1 கப்
  • வரமிளகாய் 5
  • சீரகம் 1 தேக்கரண்டி
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • தேங்காய் அரை மூடி
  • தக்காளி 2
  • பெரிய வெங்காயம்
  • இஞ்சிபூண்டு விழுது
  • பச்சை மிளகாய்
  • பட்டை, கிராம்பு
  • பிரியாணி இலை
  • மிளகாய்த்தூள்
  • மஞ்சள்தூள்
  • மல்லித்தூள்
  • கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் கடலை பருப்பை 1 மணிநேரம் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அதன்பின் அதனை வரமிளகாய் சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வடை போல் பொரித்து எடுத்து உடைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

வடகறி
வடகறி

அதன்பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். அதனபின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும். இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

vadakari
vadakari

பிறகு தேங்காயை தண்ணீர் ஊற்றி அதனை அரைத்துக்கொள்ளவும். அதன்பின் அதனை வதக்கி வைத்துள்ளவற்றில் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது பொரித்து வைத்த வடையை அதில் சேர்த்து கிளறி 5 நிமிடம் களைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான வடகறி தயார். இதனை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here