இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இன்று ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படும் ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு கூட உடனே ஆதார் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் சிலர் ஆதார் கார்டு இல்லாததால் பல சலுகைகளை இழந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக ஆதார் கார்டு எப்படி பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வீட்டில் இருந்தபடியே எளிதாக பெறலாம். அதாவது UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று அங்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதில் தேவையான விவரங்களை பதிவிட வேண்டும். அதன் பின் அனைத்து ஆவண சரிபார்ப்புக்கு பின் எளிதில் ஆதார் கார்டு கிடைத்து விடும். ஆனால் நீங்கள் முதன் முதலில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தால் உங்களுக்கு ஆன்லைன் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேபோன்று பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். மேலும் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை இருந்தால் எளிதில் சுலபமாக ஆதார் கார்டை பெற்று விடலாம்.