எண் கணித முறையில் வாழ்க்கையில் நமது பெயரின் இலக்க எண்ணிக்கையை வைத்து நாம் எப்படிபட்டவர்கள் என்பதை கணிக்க முடியும். நாம் பிறந்த தேதி எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை வைத்து ஒவ்வொரு எண்ணிற்கும் சில குணநலன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாங்க தெரிஞ்சிக்கலாம்.
எண் கணிதம்:
இப்பொழுது நாம் பிறந்த தேதி அல்லது நமது பெயரில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகை வைத்து நமது விதியெண்ணை எப்படி கணிப்பது என்று பாப்போம்.
- A, I, J, Q, Y – 1
- B, K, R – 2
- C, G, L, S – 3
- D, M, T – 4
- E, H, N, X – 5
- U, V, W – 6
- O, Z – 7
- F,P – 8
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு இணையான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயருக்கு ஏற்ற எண்களை கூட்ட வேண்டும். இப்பொழுது உங்கள் பெயர் Swarna Latha என்று வைத்துக்கொண்டால் S-3, W – 6, A – 1 , R – 2, N – 5, A – 1, L – 3, A -1, T – 4, H – 5, A – 1
இதன் கூட்டு தொகை 3+6+1+2+5+1+3+1+4+5+1 = 31. ஆனால் ஒற்றைப்படையான எண் வரும் வரை இதனை கூட்ட வேண்டும். அப்படியானால் 3+1= 4 அப்பொழுது இந்த பெயருக்கான விதி எண் 4. இதே போல் தான் பிறந்த தேதிக்கும் கணக்கிட வேண்டும். 17.11.1994 இதன் கூட்டுத்தொகை 1+7+1+1+1+9+9+4 = 33 ஆகும். 3+3 = 6 உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் விதி எண் 6 ஆகும். இவர்களின் பெயர் U, V, W என்ற எழுத்தில் வைத்தால் வாழ்கை பிரகாசமாக அமையும்.
உங்கள் விதி எண் படி குணநலன்கள்
- எண் ஒன்றை விதி எண்ணாக பெற்றவர்கள் சுதந்திர எண்ணத்துடன் இருப்பர். தனது குறிக்கோளை அடைவதில் தெளிவாக இருப்பர்.
- எண் இரண்டை விதி எண்ணாக பெற்றவர்கள் கருணை குணமிக்கவராக இருப்பர். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளில் எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பர்.
- எண் மூன்றை விதி எண்ணாக கொண்டவர்கள் இயல்பாக பழகும் தன்மைகொண்டவர். மேலும் நகைச்சுவை குணம் படைத்தவர்கள்.
- எண் நான்கை விதி எண்ணாக கொண்டவர்கள் எதார்த்த குணம் கொண்டவர்களாக இருப்பர். மேலும் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உள்ளவராக இருப்பர்.
- எண் ஐந்தை விதி எண்ணாக கொண்டவர்கள் யாரிடமும் அவ்வளவு சீக்கிரமாக பழக மாட்டார்கள். ஒரு விஷயத்தை எடுத்தால் சாதித்து காட்டியே தீர்வார்கள்.
- எண் ஆறை விதியெண்ணாக கொண்டவர்கள் பொறுப்புணர்வு அதிகம் உள்ளவராக இருப்பார்கள். இயல்பாகவே நல்லவராகவும், நேர்மையானவராகவும் இருப்பர்.
- எண் 7 – ஐ விதி எண்ணாக கொண்டவர்கள் எதிலும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள். எதிலும் தீர விசாரித்து தான் தனது முடிவுகளை எடுப்பர்.
- எண் எட்டை விதி எண்ணாக கொண்டவர்கள் பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருப்பார். செயல் வீரராகவும் திகழ்வர்.