சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு மதுபோதையில் தகராறு செய்து, சாப்பிட்ட சாப்பாடிற்காக பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக வை சேர்ந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கொலை மிரட்டல்
சென்னை ராயப்பேட்டை முத்தையா தெருவில் அபுபக்கர் என்பவர் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், புசோத்தமன், சூர்யா என்ற மூன்று பேர் உணவகத்திற்கு வந்துள்ளனர். இரவு வெகுநேரம் ஆகியதால் அபுபக்கர் தனது உணவகத்தை மூடிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இந்த மூன்று பேரும் மூன்று சிக்கன் ரைஸ் பார்சல் கேட்டுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மூன்றுபேரும் மது போதையில் இருந்ததை உணர்ந்து கொண்ட அபுபக்கர் மூன்று சிக்கன் ரைஸ் பார்சல் செய்து கொடுத்துவிட்டு 180 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதற்கு போதையில் இருந்த அம்மூன்று பேரில் ஒருவர் ‘எங்களால் பணத்தை தரமுடியாது, நான் பாஜக வில் பகுதி செயலாளராக இருக்கிறேன். என்னிடமே பணம் கேட்கிறாயா? அமித்சாவின் உதவியாளருக்கு ஒரு போன் செய்தால் போதும் உடனே 1000 பேர் இங்கு வந்து கலவரம் செய்துவிடுவார்கள்’ என்று கூறி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி சுற்று?? லீக்கான வோட்டிங் லிஸ்ட்!!
இதை தொடர்ந்து அபூபக்கர் ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த ரோந்து போலீசார் அவர்கள் மூவரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி பாஜக செயலாளர் பாஸ்கர், தொகுதி செயலாளர் புருசோத்தமன், மற்றும் சூரியா ஆகிய மூன்று பேர் தகராறு செய்தவர்கள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர் மற்றும் புருசோத்தமனை கைது செய்துள்ளனர்.