இஸ்லாமிய பண்டிகையான ரமலான் விரைவில் வர இருப்பதையொட்டி பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த பண்டிகையை பிறை நிலவை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுவதால், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி சந்திரனை பார்க்கும் குழு என அழைக்கப்படும் Central Ruet-e-Hilal Committee of Sadar Majlis-e-Ulama-e-Deccan கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ரமலான் பண்டிகை விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.