பல இடங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி கைது:
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் வெடித்த ஹிஜாப் விவகாரம் தற்போது, இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியுள்ளது. நாடெங்கிலும், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குறித்து, பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் போட்டுள்ளார்.
இந்த வழக்கில், நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன் பெங்களூரு நகர காவல் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, சேஷாத்ரி புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த, ஐபிசியின் 505(2) மற்றும் 504 இன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka | Actor & human rights activist Chethan Kumar arrested for his tweet (on Hijab and Justice Krishna Dixit). A suo moto FIR registered in Sheshadripuram PS as Cr. No. 40/2022 u/s 505(2) & 504 IPC. Kumar will be produced before the Jurisdictional Magistrate: DCP Central
— ANI (@ANI) February 22, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்