வங்கி கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இஎம்ஐ
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், தொழிலார்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் வருமானமும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தந்து கடனுக்கான இஎம்ஐ கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து தவணைகளையும் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்தது.
தவணைகான கால அவகாசம் அதிகரித்தாலும் கடனுக்கான வட்டியை சேர்த்து வசூலிக்கும் போது வட்டி சுமை அதிகரிக்கும் என பலர் கூறிவந்தனர். சலுகை என்பது குறைந்தபட்சம் சில காலத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஊரடங்கு காலத்தில் தவணையில் வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் எல்லா துறையும் பாதிக்கப்பட்டது என்றால் மத்திய அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது