தமிழகத்தின் பல பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் மழை:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் பருவமழை ஏமாற்றிய போதிலும், இம்மாத தொடக்கம் முதலே பரவலாக மழை பொழிந்து வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வயல்களில் பயிர் நடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் ஆரப்பாளையம், காளவாசல், பொன்மேனி, தீக்கதிர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவஸ்தை அடைந்துள்ளனர். இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர் பிரதேசங்களுக்கு ஈடாக வானிலை நிலவுகிறது.