தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் தென்மேற்குப் பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
‘நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை’ திரைப்பயணம் – தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்..!
மேலும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.