வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – நவ.16 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு!!
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் வரும் நவ.16 ஆம் தேதி வரை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கனமழை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 14-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் – இரட்டிப்பு லாபம்!! உடனே சேரவும்!!
மேலும், நவ.16 ஆம் தேதி வரையிலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நவ.14,15 ஆம் தேதிகளில் வங்கக்கடல், அரபிக் கடல், அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.