தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

0
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்.30 ஆம் தேதி வரைக்கும் நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பொழியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதீத மழை காரணமாக தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வரையிலும் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அரசு அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here