இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், சமூக வலைத்தளங்களிலே பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர். குறிப்பாக ரீல்ஸ் பார்ப்பதிலும், பதிவிடுவதிலுமே பொழுதை போக்குகின்றனர். இந்த சூழ்நிலையில் கேரளாவில் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
தமிழக அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வு & நிலுவை தொகை இப்போது கிடையாது? ஷாக்கிங் நியூஸ்!!!
அதாவது சுகாதாரத்துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ, புகைப்படம், கட்டுரை உள்ளிட்ட Content Creator-களாக இருக்கக் கூடாது என குறிப்பிட்டு இருந்தனர். தற்போது இதற்கு செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தரவை திரும்பப் பெறுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.