TNPSC தேர்வர்களே.., மே 16-க்குள் இந்த வேலையை முடிக்கணும்.., தேர்வு வாரியம் அறிவிப்பு!!!

0
TNPSC தேர்வர்களே.., மே 16-க்குள் இந்த வேலையை முடிக்கணும்.., தேர்வு வாரியம் அறிவிப்பு!!!
TNPSC தேர்வர்களே.., மே 16-க்குள் இந்த வேலையை முடிக்கணும்.., தேர்வு வாரியம் அறிவிப்பு!!!

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட TNPSC குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானது. இந்த தேர்வை தொடர்ந்து TNPSC குரூப் 1 தேர்வுகள் நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான முதன்மை தேர்வுகள் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதன்மை தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது முதன்மை தேர்வு எழுத இருக்கும் தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை மே 8 முதல் 16-ம் தேதிக்குள் (அரசு வேலை நாட்களில்) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர்.

மேலும் இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்றும், கட்டணத்தை செலுத்திய பின்னரே சான்றிதழ்களை பதிவேற்ற முடியும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு வேலை தேர்வுக்கட்டணத்தை செலுத்த தவறினால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

டாஸ்மாக்கை நம்பி திமுக அரசு செயல்படுகிறதா?? அதிர்ச்சியளிக்கும் தகவல் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here