ஊரடங்கால் விலை உயரும் மளிகைப் பொருட்கள்.! அதிர்ச்சியில் மக்கள்.!

0

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மளிகை மற்றும் காய்கறிகளின் தேவை அதிகமுள்ள இந்த நேரத்தில் அதன் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் ஸ்தம்பித்து போயி உள்ளனர்.

விலையேற்றம்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மொத்த வியாபாரிகள் அந்தந்த ஊரில் இருக்கும் மளிகை மற்றும் காய்கறிகளை லாரியின் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் வெளியே வர தயங்குகின்றனர். இதனால் பொருட்களில் பற்றாக்குறையால் அனைத்து பொருள்களும் விலை அதிகரித்துள்ளது.

இதனால் 40% வரை மொத்த வியாபாரத்தில் விலை உயரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ துவரம் தற்போது 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் 30 ரூபாய் அதிகரித்து இருப்பதாகவும் பிற பொருட்கள் 50 ரூபாய் வரை விலை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here