நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் விளைவாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பலரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று(ஜூன் 13) உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு, வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.