அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, TET தேர்ச்சியுடன் கூடுதலாக சூப்பர் டெட் தகுதித் தேர்வையும் எழுத கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எனக்கும் சூர்யாவுக்கும் என்ன பிரச்சனை?? ஓபன் டாக் கொடுத்த ஹரி.. முழு விவரம் உள்ளே!!
வழக்கு விசாரணை முடிவில், 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்னதாக நியமனம் செய்யப்பட்ட ஜூனியர் உயர்நிலை பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை. இருந்தாலும் கூடுதல் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.