தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து விட்டு, இன்றளவும் நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்-டம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதற்கு பதிலளித்த முதல்வர் கட்டார், “பொதுவாக ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பாக மத்திய அரசு கூறும் வழிமுறைகளை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது மத்திய அரசிடமே உள்ளது. ஆனால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது போல் தான் தெரிகிறது.” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.