தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக ரூ,3,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக பெறுகின்றனர் என அசாம் மாநில அரசு ஊழியர் சங்க தலைவர் அச்யுதானந்த ஹசாரிகா அறிவித்துள்ளார்.
TNPSC “குரூப் 4” தேர்வர்களே., எளிதில் வெற்றி பெற இத பண்ணுங்க.., சூப்பர் அப்டேட்!!!
இது தொடர்பாக நேற்று (மார்ச் 12) பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் பலரும் பதாகை ஏந்தியவாறு 2 மணி நேர போராட்டம் மேற்கொண்டனர். அதில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இப்படியாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவதால், மத்திய மாநில அரசுகள் விரைவில் நல்ல முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.