தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரித்து, நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (TANGEDCO) பிரிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் என பிரிக்கப்பட்டுள்ளதாக, தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் போராட்டம்., அரசு பரிசீலனை செய்யுமா?
இதில் மேட்டூர், வடசென்னை மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குந்தா, கொல்லிமலை நீர் மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான காற்றாலை போன்றவை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.