சேமிப்பு திட்டங்களில், பணத்தை சேமித்து வரும் பயனர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக வரும் ஜனவரி 1 முதல், இவர்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு :
பெரும்பாலான மக்கள், தங்கள் பணத்தை சேமிக்க வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக வளர்ச்சி திட்டங்களை நம்பி இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், பயனர்கள் செலுத்தும் தொகைக்கு அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது.
ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய CBCID.., டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி நடவடிக்கை!!
அந்த வகையில், ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு தொகை, மூத்தகுடிமக்களுக்கான சேமிப்பு வைப்பு தொகை ஆகியவற்றின் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இந்த அறிவிப்பு, PPF வட்டி விகிதத்துக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட இந்த வைப்பு தொகை மூலம் வட்டி விகிதம் பெற்று வரும் வாடிக்கையாளர்கள், உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
Govt hikes interest rates on NSC, post office term deposits, senior citizen savings scheme from January 1; no change in PPF rate: Order
— Press Trust of India (@PTI_News) December 30, 2022