தமிழகத்தில் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள், அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முக்கிய உத்தரவு;
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் பிற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரி அமைப்பு ஒன்று கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த மனுவில்,பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிட்ட தமிழக அரசு, பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.
இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உடல் நலம் பாதிப்பு, வயதான மாற்றுத்திறனாளிகளை பிற பிரிவினருக்கு இணையாக கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.