அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும், இதனால் மாநிலம் முழுவதும் உள்ள 1.75 லட்சம் பணியாளர்கள் பயனடைய உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
மத்திய அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியது. அரசு ஊழியர்களின், உரிமையை தட்டி பறிக்கும் இந்த திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என, ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஊழியர்களின் இந்தப் போராட்டத்தை கவனத்தில் கொண்ட ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாபிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாக மாநில முதல்வர் பகவந்த்மான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த துறை சார்ந்த ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்., அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அரசின் இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் உள்ள 1.75 லட்சம் பணியாளர்கள் பயனடைய உள்ளதாக தெரிவித்தார். இது போக புதிதாக அடுத்த 5 ஆண்டுகளில் 4,100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.