தமிழகத்தில், குறிப்பிட்ட இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய மற்றும் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றோருக்கு, அவர்களுக்கான தொகை தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதுபோக தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெற்ற கடன்களையும், தள்ளுபடி செய்து விரைவில் ரசீது வழங்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்., நாளை வேலைவாய்ப்பு முகாம்! எங்கு தெரியுமா?
அதாவது கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து,ரூ.10,292 கோடி மதிப்பில் விவசாய கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.