உலக அளவில் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் அணைத்து துறைகளிலும் செய்யும் சாதனைகளை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் போன்று விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதுகளை தமிழ்நாட்டு அளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், விசுவநாதன் ஆனந்த், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பல தலைவர்களும் பெற்றுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா, பத்ம விபூஷண்-க்கு அடுத்தபடியாக இருக்கும் பத்ம விபூஷண் விருதை மதுரையில் வளர்ந்த கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவின் இந்திய தூதர் தரண்ஜித் சிங்-கால், கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் நேற்று வழங்கப்பட்டது.
பத்ம விபூஷண் விருதை பெற்ற சுந்தர் பிச்சை கூறுகையில், “இந்தியா என்னில் ஒரு பாதி எங்கு சென்றாலும் என்னுடன் எடுத்து செல்வேன். மேலும், இந்த மகத்தான விருதை அளித்த இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.