நடிகர் அர்னவை பிரிந்து வாழ்ந்து வரும் திவ்யா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை திவ்யா ஸ்ரீதர்:
சின்னத்திரை சீரியலில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இப்படி பிசியாக நடித்து வந்த திவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் முன்னால் ஹீரோவாக நடித்த அர்னவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடை காரணம் காட்டி அர்னவ் தன்னை ஏமாற்றியதாகவும், மாசமாக இருக்கும் என்னை கொடுமை படுத்தியதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த அடிப்படையில் அர்னவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கண்டிஷனல் பெயிலில் வந்த அர்னவ், திவ்யாவை எட்டி கூட பார்க்கவில்லை. இருந்தாலும் மனம் மாறி வந்தால் அர்னவை ஏற்றுக்கொள்வேன் என்று திவ்யா ஸ்ரீதர் கூறி வருகிறார். இப்படி தனியாக வாழ்ந்து வரும் திவ்யாவிற்கு சமீபத்தில் சக சீரியல் நட்சத்திரங்கள் சேர்ந்து அவருக்கு வளைகாப்பு நடத்தி சந்தோசப்படுத்தினர்.
முருங்கை கீரையில இந்த மாதிரி செஞ்சா முடி முட்டிக்கு கீழ வளருமா?? இதோ உங்களுக்காக அருமையான டிப்ஸ்!!
அந்த சந்தோஷமான தருணத்தை திவ்யா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வகையில் இன்னொரு ஒரு வீடியோவை திவ்யா வெளியிட்டுள்ளார். அதாவது திவ்யா புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளார். அதற்கு கேப்ஷனாக புதிய ஒன்றின் ஆரம்பம் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகிறது, எதுவும் சாத்தியமாகும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram