தென் ஆப்பிரிக்கா அணியில் இணையும் சூர்யகுமார்?? வெளிப்படையாக கூறிய முன்னாள் கேப்டன்!!

0
தென் ஆப்பிரிக்கா அணியில் இணையும் சூர்யகுமார்?? வெளிப்படையாக கூறிய முன்னாள் கேப்டன்!!
தென் ஆப்பிரிக்கா அணியில் இணையும் சூர்யகுமார்?? வெளிப்படையாக கூறிய முன்னாள் கேப்டன்!!

இந்திய வீரர்கள், தென் ஆப்பிரிக்கா லீக் தொடரில் விளையாடுவது குறித்து முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

CSA T20:

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் 20 ஓவர் தொடர் போல, பல்வேறு நாடுகளில், வெவ்வேறு பெயர்களில், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வருடம் ஜனவரி முதல் பிப்ரவரி வரை 6 அணிகளுக்கு இடையே CSA T20 என்ற பெயரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், சர்வதேச இந்திய வீரர்களை தவிர்த்து பல்வேறு நாடுகளிலிருந்தும் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு காரணம், பிசிசிஐயானது இந்திய அணிக்காக விளையாடும் எந்த ஒரு வீரரையும் மற்ற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் விளையாட அனுமதி அளிக்க வில்லை. ஓய்வு பெற்ற இந்திய வீரர்களுக்கு மட்டுமே பிசிசிஐயானது அனுமதித்துள்ளதாக தகவல் முன்பே வெளியானது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா லீக் தொடருக்கு முன்பாக இது குறித்து முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்…, இவருக்கு பதில் இவர் தான்?? வெளியான தகவல்!!

அவர் கூறியதாவது, பிசிசிஐயின் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய வீரர்கள் CSA T20 லீக்கில் விளையாட வேண்டுமானால், சர்வதேச தென் ஆப்பிரிக்கா அணிக்காக இவர்கள் விளையாட வேண்டும். அப்படி என்றால், சூர்யகுமார் தென் ஆப்பிரிக்கா அணியில் விளையாட வேண்டும் என்று கேலியாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, பிசிசிஐ தங்களது முடிவை மாற்றினால், இந்திய வீரர்களின் திறமையை தென் ஆப்பிரிக்காவிலும் பார்க்க முடியும் என்று தனது ஆசையை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here