சவரனுக்கு ரூ.520 வரை அதிகரித்த தங்கத்தின் விலை – கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!!

0

கடந்த சில நாட்களாகவே ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் மக்கள் தங்க நகையை மகிழ்ச்சியாக வாங்கி வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

கடந்த கொரோனா காலத்தில் ஆபரணதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அதன்பின்பு தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டது. பின்பு கடந்த பண்டிகை காலத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. தொடர் வீழ்ச்சியை தங்க விலை கண்டதால் மக்கள் மற்றும் நகை பிரியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்க நகையை மகிழ்ச்சியாக வாங்கி வந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல்வர் கெஜ்ரிவால் மகளிடம் பண மோசடி – கைவரிசையை காட்டிய மர்ம நபர்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதனால் தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.36,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.70 உயர்ந்து தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,535 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் வெள்ளி கிராமிற்கு ரூ.1.60 உயர்ந்து தற்போது ரூ.75.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.75,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here