தமிழகத்தில் தொடர்ந்து புது உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் நகை வாங்கச் சென்ற பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்து பொழுது, நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதால் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு ஊரடங்கில் சற்று தளர்வுகள் வழங்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே வசதி (WhatsApp Payment)..!
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து ரூ. 4,619 க்கும், ஒரு சவரன் 328 ரூபாய் குறைந்து 36,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1.10 ரூபாய் குறைந்து ரூ. 52.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 52,400 ரூபாயாக உள்ளது.