சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் விலை உயர்ந்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது.
இன்றைய நிலவரம்:
ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல, தங்க விலையும் உயர்ந்து கொண்டே சென்றது. கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாத போதிலும், விலை அதிகரித்தது பொதுமக்களை குழப்பமடைய செய்தது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்ததே. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, தொழில் துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பிற பங்குகளின் மதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. மேலும் தங்கத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகமும் சூடுபிடித்துள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலையில், தினமும் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த விலை, இன்று மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.26 அதிகரித்து ரூ.4,760க்கும், ஒரு சவரன் 208 ரூபாய் உயர்ந்து ரூ.38,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.65.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.