இன்று காலை குறைவான விலையில் விற்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சற்று உயர்ந்து விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றத்தினால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விலை திடீர் உயர்வு
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக மிகவும் குறைவான விலையில் விற்கப்பட்ட ஆபரணத்தங்கம் தற்போது மீண்டுமாக உயர்வை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆபரணத்தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுவது வழக்கம். இன்று காலை வரை குறைவான விலையில் விற்பனையான தங்கம் இன்று மாலையில் சற்று விலை உயர்வை அடைந்துள்ளது. இதனால் வாடிக்கையாக தங்கம் வாங்கும் மக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
காதலர் தினத்தை கொண்டாடினால் அதிரடி கைது – காவல்துறை எச்சரிக்கை!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 4,524 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 16 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 35,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு காலை விற்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ 73.70 காசுகளுக்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.