நாடு முழுவதும் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக, தபால் நிலையங்களில் “சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)” எனும் சிறுசேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அப்படி கணக்கு தொடங்கிய பிறகு தவணையை செலுத்த தவறினால், ரூ.50 அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த வெற்றி படத்திற்கு தயாரான நடிகர் தனுஷ்.., பூஜையுடன் தொடங்கிய புதிய திரைப்படம்!!
21 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தின் தற்போதைய வட்டி 8.2 சதவீதமாக வழங்கப்படுகிறது. அதேபோல் பெண் குழந்தைகளுக்கு 18 வயது எட்டியதும், உயர்கல்விக்காக 50 சதவீத கார்பஸ் தொகையை திரும்ப பெறலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் உள்ள தபால் நிலையங்களில் தகுந்த ஆவணங்களை கொண்டு கணக்கை திறக்கலாம்.