மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்களே கொலை செய்த கொடூரம் – போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0

உசிலம்பட்டி பகுதியில் திடிரென்று பெண்சிசு மரணம் அடைந்துள்ளது. தற்போது இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் கே.பாறைப்பட்டியில் சின்னசாமி-சிவப்ரியங்கா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 வயதிலும் 3 வயதிலும் பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது இவர்களுக்கு 3 வது பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் இந்த தம்பதி தனது வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்பு வீட்டிற்கு சென்ற நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி குழந்தையுடன் மறுபடியும் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டதை கவனித்தனர். பின்பு இதுகுறித்து அந்த பகுதி போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட பரிசோதனையின் முடிவில் குழந்தை செயற்கையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் தான் இறந்துள்ளது என்று தெரிவித்தனர்.

TNUSRB – சீருடை பணியாளருக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!

இதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த குழந்தையின் மரணத்தில் இவர்கள் உறவினர்களுக்கும் சம்பந்தம் இருந்தால் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here