தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே பொதுத்தேர்வு பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தேர்வுகளை திறம்பட நடத்தி முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பொதுத்தேர்வு காலங்களில் மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என மின்வாரிய துறைக்கு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை மனு அளித்து இருந்தது. இதை பரிசீலித்த அதிகாரிகள், பொதுத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தயாராகும் விதத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் முழுநேர மின்தடை மேற்கொள்ளபடாது என தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களே கவனம்., பழைய ஓய்வூதியத்திற்கு மாற கடைசி சான்ஸ்! மனமிறங்கிய மத்திய அரசு!!
மேலும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மின்தடை செய்யப்படும். என்றும், அதையும் விரைவில் சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.