விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி விலக போவதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருவது பாக்கியலட்சுமி தொடர் தான். இந்த சீரியலின் மையக்கருத்தாக இருந்து வருவது, கணவனை இழந்து தனித்து வாழ்ந்து வரும் பாக்கியா என்ற பெண் ஒருத்தி, பல தடைகளை மீறி வெற்றி பெருகிறாரா?? இல்லையா?? என்பதே கதை. தற்போது பாக்கியா ஒரு தொழிலை ஆரம்பித்தது மட்டுமின்றி, அதில் வெற்றி பெறுவது போல் காட்சிகள் காமிக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதே போல் பாக்கியாவை கழட்டிவிட்டு ராதிகாவை கரம் பிடித்த கோபி படாத பாடுபடும் காட்சிகளும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோபி பாக்யாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கேவலமாக பேசிய நிலையில், பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்பு சென்று கொண்டிருக்கும் போது ரஞ்சித் நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார் என்கிற புது கதாபாத்திரத்தை சந்திக்கிறார் பாக்கியா. அந்த எபிசோடில் இருந்து பழனிச்சாமி வாத்தியார் கதாபாத்திரத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பிரபல புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம்.., தமிழக முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!!
அதுமட்டுமின்றி இந்த தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷ்க்கு முக்கியத்துவம் குறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த சதீஷ் வெளியேற போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் பாக்கியலட்சுமி சீரியலில் 300 எபிசோடுகளுக்கு மேல் நடித்துவிட்டேன். அதுவே எனக்கு போதுமானது. இனிமேல் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram