இந்திய அணியின் வெற்றிக்கு இவங்க தான் காரணம்.., முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

0
இந்திய அணியின் வெற்றிக்கு இவங்க தான் காரணம்.., முன்னாள் வீரர் ஓபன் டாக்!!
இந்திய அணியின் வெற்றிக்கு இவங்க தான் காரணம்.., முன்னாள் வீரர் ஓபன் டாக்!!

T20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் விளையாடிய விதம் பற்றி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

16 அணிகள் கலந்து கொண்ட T20 உலக கோப்பை தொடர் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி இந்த ஆண்டு பட்டத்தை வெல்லுமா?? என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அக்டோபர் மாத சிறந்த வீரர் & வீராங்கனையை அறிவித்த ஐசிசி…, இவங்க இரண்டு பேருக்கு தானா??

அதாவது நடப்பாண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் ஆட்டங்களில் இந்திய அணி சரிவில் இருந்த போதெல்லாம் விராட், சூர்யகுமார் யாதவ் தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இது தவிர ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் விளையாடிய ஒவ்வொரு ஷாட்டும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உலக கோப்பை தொடரில் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் இது போன்று சூர்யகுமார் யாதவ் விளையாடினால் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். T20 உலக கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் மொத்தம் 3 அரைசதங்கள் உட்பட 225 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here