இன்றைய காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்த கூடாது என்று அரசு பல நிபந்தனைகளை கொண்டு வந்த போதிலும் ஒரு சிலர் இன்னும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்’ என்று மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதுமட்டுமின்றி உத்கர்ஷ் குளோபல் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு 350 மஞ்சப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் விசேஷ தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எந்தெந்த ஏரியானு தெரியுமா?