உத்தராகண்ட் மாநில அரசு அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச சிலிண்டர்கள்:
உலகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மக்கள் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் ஏழ்மை வீட்டு இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அரசு வெளியிட்ட மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அரசின் நிபந்தனைப்படி,உத்தராகண்ட் மாநிலத்தில் வாழ்பவராகவும் மற்றும் அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், அந்தியோதயா ரேஷன் அட்டை சிலிண்டர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதை பூர்த்தி செய்வபர்களுக்கே இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது. மக்களின் வறுமையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டுவர உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்