தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு கடந்த ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கிய இந்த மாணவர்கள் சேர்க்கையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை அரசு 25% ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் இடங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை., அதிரடி அறிவிப்பு!!!
ஆனால், தற்போது வரை 1 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், குழுக்கள் முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த இலவசக்கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விண்ணப்ப எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.