எல்லை மீறும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம்.., அந்த அளவிற்கு போன சம்பவம்.., திடுக்கிடும் தகவல் லீக்!!

0
எல்லை மீறும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம்.., அந்த அளவிற்கு போன சம்பவம்.., திடுக்கிடும் தகவல் லீக்!!
எல்லை மீறும் சம்யுக்தா-விஷ்ணுகாந்த் விவாகரத்து விவகாரம்.., அந்த அளவிற்கு போன சம்பவம்.., திடுக்கிடும் தகவல் லீக்!!

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை சம்யுக்தா. இவர் சீரியல் நடிகர் விஷ்ணு காந்த் என்பவரை 8 மாதமாக காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று மாதம் கூட நீடிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சோசியல் மீடியாவில் தங்களுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து இருவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாற்றி மாற்றி தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஷ்ணுகாந்த் அனைத்து பிரச்சனைகளுக்கும் சம்யுக்தா தான் காரணம் என்று சில தினங்களுக்கு முன்பு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா லைவில் வந்து விஷ்ணு குறித்து பல குற்றச்சாட்டுகளை புட்டு புட்டு வைத்தார்.

மேலும் சம்யுக்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இன்ஸ்டாவில் லைவ் வருகிறேன் என்று விஷ்ணு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன் சம்யுக்தா மீண்டும் லைவில் வந்து விஷ்ணு தனது உறவினருக்கு கால் செய்து, என்னுடைய வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும் 4 மணி நேர வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறி இருந்தார். இது தொடர்பாக அவர் விஷ்ணு மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக இலவச கட்டாய கல்வி விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…, தனியார் பள்ளிகள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இந்த நிலையில் விஷ்ணுகாந்த் தான் சொன்னது போலவே 6 மணிக்கு இன்ஸ்டாகிராம் லைவில் வந்து நான் யாரையும் மிரட்டவில்லை நான் சம்யுக்தாவின் சித்திக்கு தான் போன் பண்ணி சம்யுக்தா இப்படி என்னை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேசினேன் என்று கூறி அவருக்கு பதிலடி கொடுத்தார். மேலும் அவர் சித்தி பேசிய ஆடியோவையும் லைவில் போட்டு காமித்தார். தொடர்ந்து பேசிய அவர் காவல்துறை கால் செய்யும் போது என்னால் எடுக்க முடியாமல் போனது, எனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு நானும் வருகிறேன். நீங்களும் வாங்க அங்க வைத்து எல்லாத்தையும் முடித்து கொள்ளலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here