நாடு முழுவதும் உள்ள 18 முதல் 25 வயது உட்பட்ட ஆண்களுக்கு, இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை ஜனவரி 1 முதல் தொடங்கப்போவதாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
பிரதமர் அறிவிப்பு :
கொரோனா தொற்றின் தாக்கம் உலக நாடுகள் இடையே, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இதிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில், அதிகரித்து வரும் தேவையற்ற கர்ப்பங்கள் மற்றும் பால்வினை நோய்களை தடுக்க அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் 18 முதல் 25 வயது உட்பட்ட ஆண்களுக்கு, இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை ஜனவரி 1 முதல் தொடங்கப்போவதாக அந்நாட்டின் பிரதமர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாண்ட்ஸ் புயல் எதிரொலி.., ஊழியர்களுக்கு மின்வாரிய துறை விடுத்த எச்சரிக்கை!!
ஏற்கனவே 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இலவச பிறப்பு கட்டுப்பாடு, வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆண்களுக்கான இந்த இலவச காண்டம் திட்டம், கருத்தடைக்கான ஒரு சிறிய புரட்சியாக இருக்கும் என அந்நாட்டின் பிரதமர், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.