வங்கக்கடலில் மாண்ட்ஸ் புயல் மையம் கொண்டு தமிழ்நாட்டை நெருங்கி வருவதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி கல்லூரி விடுமுறை, பேருந்து, விமான பயணங்கள் ரத்து போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது புயலின் எதிரொலியால் கடலோர மாவட்டங்களில் அதி கனமழையாகவும், உள் மாவட்டங்களில் லேசான முதல் கனமழையாகவும் பெய்து வருகிறது. இதனால் மக்களின் பாதுகாப்புக்காக மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கையாக சுமார் ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் ரெட் அலர்ட் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி…, காமன்வெல்த் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்களா??
இதைத்தொடர்ந்து பலத்த காற்றுடன் புயல் வருவதாலும் தொடர் கனமழையாலும் மின் கம்பங்கள் பழுதடையும் பட்சத்தில் உடனடியாக சரி செய்ய மின் நிலைய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும் மின்கசிவால் உயிரிழப்பு ஏற்படாமல் மக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.