தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (நவம்பர் 27) புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதால், அப்பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு நாளை மறுநாள் (நவம்பர் 29) இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மணிக்கு 45-65 கி.மீ. வேகத்தில் நகரக் கூடும்.
மேலும் டிசம்பர் 1ஆம் தேதி மணிக்கு 90 கி,மீ. வேகத்தில் கடக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக கடல் அலை வழக்கத்திற்கு மாறாக அதி தீவிரமாக இருப்பதால், இன்று (நவம்பர் 26) முதல் ஐந்து நாட்களுக்கு இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே.., இனிமேல் இதை செய்யாதீர்கள் – எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் போலீஸ்!!