மக்களே.., இனிமேல் இதை செய்யாதீர்கள் – எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் போலீஸ்!!

0
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தெரியாத நபர்கள் சோசியல் மீடியா மூலம் தொடர்பு கொண்டால் பதிலளிக்க வேண்டாம்.
மேலும் அதே சோசியல் மீடியா மூலம் பார்ட் டைம் ஜாப், வேலை வாய்ப்பு என முன் பணம் கட்ட சொன்னால் மக்கள் கட்ட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே லாபம் ஈட்டலாம் என்று கூறி முதலீடு செய்ய சொன்னால் செய்யாதீர்கள். உயர் அதிகாரிகள் என்று கூறி தொடர்பு கொண்டால் நம்பாதீர்கள். ஆன்லைன் ஆப் மூலம் கார் பரிசாக விழுந்துள்ளது பணத்தை கட்டி எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினால் பணத்தை செலுத்தாதீர்கள் என்று சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here