இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சிக்கேற்ப ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் பயனாளர்களுக்கு QR மூலம் டிக்கெட் விநியோகம் செய்யும் வசதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய ரயில்வேயும் பொதுப் பெட்டிகளுக்கான டிக்கெட்களை QR குறியீடு மூலம் விநியோகம் செய்து வருகிறது.
கரகாட்டக்காரன் பட கனகாவா இது? இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே ? ஷாக்கான ரசிகர்கள்!!
இதற்கு இந்திய ரயில்வேயின் UTS செயலியில் சென்று “புக் டிக்கெட்” ஆப்ஷனில் QR புக்கிங் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து சென்றடையும் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன்பின் UPI வசதியைப் பயன்படுத்தி பேமெண்ட் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.